டில்லி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக உத்தரவிட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

அமலாக்கத்துறை டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி 8 முறை நோட்டீஸ் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பப்பட்ட முதல் 3 சம்மன்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாததை எதிர்த்தும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் டில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்கு தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் மீது டில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூடுதலாக வழக்கு தொடர்ந்துள்ளது. கூடுதலாக அனுப்பப்பட்ட 5 சம்மன்கள் தொடர்பான விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர் ஆகாததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணை இன்று நடைபெற்றபோது, வழக்கு தொடர்பாக வரும் 16 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.