டெல்லி: டெல்லியில் இன்று மேலும் 3,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: டெல்லியில் இன்று மேலும் 3,299 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,31,017 ஆக உள்ளது.
இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 28 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஒட்டு மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,009 ஆக உயர்ந்துள்ளது.
2,863 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டனர். அதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,01,716 ஆக உள்ளது. தற்போது 23,292 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.