கடலூர்: அவதூறு வழக்கில், பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இது பாஜகவிரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கிட்னி திருட்டில் ஈடுபட்டது திமுகவினருக்கு சொந்தமான மருத்துவமனைகள் என்பதும் கண்டறியப்பட்டது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாஜக உறுப்பினரான வேலூர் இப்ராகிம், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
அவதூறு பரப்பிய வேலூர் இப்ராஹிம் கடலூர் சிறையில் இன்று அடைக்கப்பட்டுள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடப்பதாக அவதூறு குற்றசாட்டையதுடன், ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்றார். அவரை காவலர்கள் உள்ளே நுழைய மறுப்பு தெரிவித்த நிலையில், அவர் அத்துமீறி மருத்துவமனைக்குள் நுழைய முயன்றார்.
இதையடுத்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அரசு மருத்துவமனை ணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
அதாவது, வேலூர் இப்ராகிம்மீது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆவேசமாக பேசுதல், மிரட்டல், தவறான தகவல்களை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல், தொற்று நோயை பரப்புதல் என 5 பிரிவுகளின் கீழ் வேலூர் இப்ராஹிம் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
அவரை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாதுகாப்பது மற்றும் நிர்வாக காரணங்களுக்காக புழல் சிறை காவலர்கள் அவரை கடலூர் சிறைக்கு கொண்டு செல்லுமாறு போலீசாரிடம் அறிவுறுத்தினர். இதை அடுத்து போலீசார் அவரை கடலூர் சிறைக்குக் கொண்டு சென்று இன்று அதிகாலை கடலூர் சிறையில் வேலூர் இப்ராஹிமை அடைத்தனர்.