சென்னை:
கொரோனா எதிரொலியால் பயணிகள் வருகை குறைவு காரணமாக 12 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தற்போது தீவிரமாகி வருகிறது. இதைத் தடுக்க மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இதன்காரணமாக, சிறப்பு ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதையடுத்து, சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிா்வாகம் தற்காலிகமாக ரத்து செய்துவருகிறது.
இதன் தொடா்ச்சியாக, சென்னை சென்ட்ரல், புட்டபர்த்தி, திருப்பதி, எர்ணாகுளம், கண்ணூர் உள்ளிட்ட இருமார்கத்திலும் ஜூன் 1ம் முதல் 15ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel