தமிழகம் முழுவதும் 86,000 பேருக்கு 6 மாதங்களில் புறம்போக்கு நிலத்துக்கான பட்டா வழங்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வருவாய்த் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 17ல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் புறம்போக்கு பட்டா நடைமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதில், வருமான வரம்பு உள்ளிட்ட விதிகள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புறம்போக்கு நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போருக்கு பட்டா வழங்க ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், ஆண்டு வருமானம், ரூ.5 லட்சமாக உள்ள குடும்பங்களுக்கு, 3 சென்ட் புறம்போக்கு நிலத்துக்கு பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.