புதுச்சேரி:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுவையில் வரும் 27-ஆம் தேதி பந்த் நடைபெறும் என்று மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை  வலியுறுத்தி 26-ஆம் தேதி பேரணியும், 27ந்தேதி முழுஅடைப்பு போராட்டமும் நடைபெறும் புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி உள்பட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில், புதுச்சேரியில் இன்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி , ‘குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரியில், வருகிற 26-ஆம் தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 27-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் (பந்த்) நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.