சென்னை

றைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையொட்டி, கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, குன்றத்தூரைச் சேர்ந்த ரவுடி திருவேங்கடம், பூந்தமல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், அஞ்சலை, ஹரிஹரன், சதீஷ் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் ஜூலை 14-ம் தேதி என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது  இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிஏற்ஊ.

தற்போது ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தற்போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்து காஅவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஆம்ஸ்ட்ராங் மனைவி, உறவினர்கள் வசிக்கும் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்புக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.