சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், அரபிக்கடலில் முதல் சூறாவளி புயல் உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு ‘சக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் உருவான இந்த பருவத்தின் முதல் சூறாவளி புயல் வெள்ளிக்கிழமை ‘சூறாவளி சக்தி’யாக தீவிரமடைந்துள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது. தற்போது குஜராத்தின் துவாரகாவிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 250 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல் சனிக்கிழமைக்குள் கடுமையான சூறாவளி புயலாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நிலப்பரப்பில் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று முன்னறிவிப்பாளர்கள் கூறியிருந்தாலும், வார இறுதியில் கடல் நிலைமைகள் கொந்தளிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2வது வாரம் தொடங்கும் என்றும், இது இயல்பை விட அதிகமாக பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இதற்கிடையே வடகிழக்கு பருவமழை காலத்தின் முதல் சூறாவளியாக அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு இலங்கை பரிந்துரைத்த சக்தி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குஜராத்தின் துவார்காவில் இருந்து சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில், வடமேற்கு திசையில் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது தீவிர புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த புயல் நாளைக்குள் வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடலில் மத்திய பகுதிகளை அடைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுரு கேரளாவை நோக்கி நகராமல், டலுக்குள் மேற்கே நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படு கிறது.
இதனால் கடலோர பகுதிகளில் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே வங்க கடலில் உருவான மற்றொரு தாழ்வு பகுதி ஒடிசா மாநிலத்தில் கோபால்பூரை ஒட்டிய பகுதியில் தீவிரமாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் ஒடிசாவின் உள்பகுதிகளையும், வடக்கு திசையில் சத்தீஸ்கரையும் தாக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சக்தி புயல் காரணமாக இன்று தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிபேட்டை, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்கில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், சில சமயங்களில் தீவிரமடையலாம் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், சில சமயங்களில் தீவிரமடையலாம் என்றும், அத்துடன் இடி மின்னலும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வெப்பநிலை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 32°C முதல் 33°C வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 24°C முதல் 25°C வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல்ஈ கடலூர், அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படும் பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர வானிலை நிலவரப்படி, நேற்று (அக்டோபர் 3), ஓரிரு இடங்களில் மழை பதிவானது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
தமிழகத்தில் அதிகபட்சமாக 39.5°C வெப்பநிலையை பாளையங்கோட்டை பதிவு செய்தது. சமவெளிப் பகுதிகளில் குறைந்தபட்சமாக 22.5°C வெப்பநிலையை கரூர் பரமத்தி பதிவு செய்தது. தமிழகத்தில் நேற்று மதியம் வரை பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், அதன்பிறகு மழை பெய்ய தொடங்கியது. அதில், திண்டுக்கல், விருதுநகர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்த நிலையில், சென்னையில்,இன்று காலையில் பல பகுதிகளில் லேசான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.