திருமலை:
வார விடுமுறையை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்தியாவில், மிக பிரசித்தி பெற்ற கோவில்களில், திருப்பதி ஏழுமலை வெங்கடேச பெருமாள் கோவில் விளங்குகிறது. வழக்கமான நாட்களிலேயே இந்த கோவிலில், பக்தர் கூட்டம் மிக அதிகமாக காணப்படும். அதுவும், பெருமாளுக்கு உகந்த விசேஷ காலங்களில், திருப்பதில், பக்தர் கூட்டம் நிரம்பி வழிவது வழக்கம். தமிழகம், ஆந்திரா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், அடிக்கடி வந்து செல்லும், பிரபலமான கோவிலாக விளங்குகிறது.

வார விடுமுறையை ஒட்டி, இலவச தரிசனத்திற்காக சுமார் 4 கிலோ மீட்டர் நீள வரிசையில், பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்தனர்.