டில்லி,

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 44வது பிறந்தநாள் இன்று கொண்டாப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கரின் அபார சாதனைகள் பொன்னேட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவருக்கு , டெல்லி மேல்-சபை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

சுமார்  25 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியை தனது நுட்பமான ஆட்டத்தால் பல வெற்றிகளை பெற்று சாதனை செய்தவர் சச்சின்.

இன்று  44-வது பிறந்தநாளை கொண்டாடும், சச்சினை கவுரவிப்பதற்காக,  இ.எஸ்.பி.என் தொலைக்காட்சி நிறுவனம், சச்சினின் ஆரம்பகால கிரிக்கெட் தொடங்கி உலகக் கோப்பையை வென்ற உணர்ச்சிமிகு தருணங்கள் வரை  தொகுத்து ஆவனப்படமாக ‘லிட்டில் மாஸ்டர்’  என்ற பெயரில் தயாரித்து ஒளிபரப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் பிறந்தநாளையொட்டி அவருக்கு உலகம் முழுவதும் இருந்து அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.