கொழும்பு:
லங்கையில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில்3,094 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 200,000- ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து 1.66 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 34 ஆயிரத்து 569- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் 1,656- பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா 3வது அலை பரவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு அதிகரிப்பால் இலங்கையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகளின் போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.