டெல்லி: மக்களின் கவனக்குறைவு தான் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க காரணம் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 24,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,13,33,728ஆக அதிகரித்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 140 போ் பலியாகி உள்ளனர்.

நாட்டின் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந் நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கடந்த 6 மாநிலங்களில் இல்லாத அளவாக தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் கொரோனா பரவல் மீது அலட்சியம் காட்டுவது பொருத்தமான நடவடிக்கையாக இருக்காது.

நாட்டில் பலவேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகம், குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்துள்ளது என்று கூறினார்.