டெல்லி: கொரோனா தொற்று என்பதற்கான அறிகுறியாக தற்போது மேலும் 7 அறிகுறிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றானது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல், வறட்டு இருமல், சுவை திறன் இழப்பு, தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம், நுகர்வு திறன் இழப்பு போன்றவைகள் கொரோனா அறிகுறிகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

இந் நிலையில், மேலும் 7 பாதிப்புகள் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளாக சேர்க்கப்பட்டு உள்ளன. அவை, தசை வலி, மூட்டு வலி, வயிற்று போக்கு, சரும பிரச்னை, கை,கால் விரல்களின் நிறம் மாறுதல், வெண் படலம் ஆகியவை கொரோனாவுக்கான அறிகுறிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராததால், அதில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் மீண்டும் அறிவுறுத்தி உள்ளனர்.