லக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து இதுவரை சுமார் 5 ஆயிரம் நோயாளிகள்  குணமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்றைய (12ந்தேதி) நிலவரப்படும்   உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 5000 நோயாளிகள் மீட்கப்பட்டு இருப்பதாகவும், அதிகப்பட்சமாக சீனாவின்  ஹூபே மாநிலத்தில் 2,639  பேர் குணமடைந்து இருப்பதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவித்து உள்ளன.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக சீனாவில் 1000க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதை தடுப்பதற்கான மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதற்கான முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க மற்றொருபுறம் நோய் பரவுவதை தடுக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு  வருகின்றன.

இதுகுறித்து ஆய்வு செய்து வரும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்றைய ( பிப்ரவரி 12 ஆம் தேதி)  நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,000 க்கு மேல் உயர்ந்துள்ள நிலையில் கூட, மீட்பு விகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளது. .

பதிவுசெய்யப்பட்ட மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை மற்றும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கைக்கு இடையில் உள்ள பரந்த இடைவெளியை நிராகரிக்கவில்லை என்றாலும், மொத்தம் 4,849 பேர் இந்த நோயிலிருந்து வெற்றிகரமாக மீண்டுள்ளனர்  இது சில நம்பிக்கையை அளிக்கிறது. மீட்டெடுப்புகளில் பெரும்பாலானவை மெயின்லேண்ட் சீனாவிலிருந்து பதிவாகியுள்ளன, ஹூபே  2,639 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என்று தெரிவித்து உள்ளது.

மேலும்,  உலகின் பிற பகுதிகளில் உள்ள நாவல் கொரோனா வைரஸ் நோயாளிகளும் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், இதுபோன்ற உலக நாடுககளில் இருந்து மேலும்  10 பேர் மீண்டு வந்துள்ளதாகவும், அதன்படி தாய்லாந்திலும், சிங்கப்பூர் ஏழு பேரும், அமெரிக்காவில் 3 பேரும் கொரோணா பாதிப்பில் இருந்தும் மீண்டு வந்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

அதே வேளையில், இந்தியாவின் முதல் நோயாளியான கேரளாவை சேர்ந்தவரும், தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளது.