சென்னை

கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை காரணமாகப் பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.  இதையொட்டி நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் அதிகரித்துள்ளது.  குறிப்பாகத் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் தீவிரப்படுத்த முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அவ்வகையில் மாநிலத்தில் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.   சென்னையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் முகாம்களைத் தொடங்கி வைத்துள்லார்.

அவர் தனது தொகுதியில் உள்ள வி ஆர் பிள்ளை தெரு, , கேனல் சாலை, முத்தையா தெரு ஆகிய 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களைத் தொடங்கி வைத்தர்.  அதன் பிறகு வீடு வீடாக நடந்தே சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

அத்துடன் ராயப்பேட்டையில் கொரோனா தொற்றால் வீட்டுத் தனிமையில் உள்ளவர்களைச் சந்தித்த உதயநிதி உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.  அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய மாநகராட்சி ஊழியர்களுக்கு உதயநிதி உத்தரவிட்டார்.