டில்லி

ன்று இன்று மகாராஷ்டிராவில் 4259 பேர், கேரளாவில் 5949, மற்றும் டில்லியில் 1935 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 4,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 18,76,699 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 80 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 48,139 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,949 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 17,53,922 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது 73,542 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 5,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 6,64,633 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 32 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 2595 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,268 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,01,861 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 60,029 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 1,935 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,05,470 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 47 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 3,193 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 3,191 பேர் குணம் அடைந்துள்ளனர்.    இதுவரை 5,78,116 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 17,373 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.