டில்லி

ந்தியாவில் இன்று காலை 8 மணி வரை 7447 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கையும் தாண்டி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 1035 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 7447 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் உயிர் இழந்ததால் மொத்தம் உயிர் இழந்தோர்  எண்ணிக்கை 239 ஆகி உள்ளது.