சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  4,45,851 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தொற்று பாதிப்பு கடந்த மாதம் குறைந்து வந்த நிலையில், பின்னர் மீண்டும் உயரத் தொடங்கி, 1200 அருகில் இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது.

 இன்று 968 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதுபோல,  சென்னையில் இன்று 29 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 968 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளார். இதனால், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,724ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,23,851 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 92 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 34 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 58 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 7,608 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 29பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை  2,814 பேர் உயிரிழந்துள்ளனர்.