டெல்லி: தலைநகர் டெல்லியில் குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்போதைய நிலையில், தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1லட்சத்து 77ஆயிரம்தை தாண்டியுள்ளது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறித்து, மாநில  சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று  ஒரே நாளில் மேலும் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,77,060 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 18 பேர் உயிரிழந்ததையடுத்து, டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 4,462 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 15,870 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,56,728 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.