சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2146 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,48,225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,387 பேர் உயிர் இழந்து 7,18,129 பேர் குணம் அடைந்து தற்போது 18,709 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 577 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,06,024 பேர் பாதிக்கப்பட்டு 3,734 பேர் உயிர் இழந்து 1,96,471 பேர் குணம் அடைந்து தற்போது 5,819 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 45,492 பேர் பாதிக்கப்பட்டு 577 பேர் உயிர் இழந்து 43,897 பேர் குணம் அடைந்து தற்போது 1018 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 45,492 பேர் பாதிக்கப்பட்டு 694 பேர் உயிர் இழந்து 43,541 பேர் குணம் அடைந்து தற்போது 887 பேர் சிகிச்சையில் உள்ளனர்.