சென்னை

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப சஹி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வருபவர் அமரேஷ்வர் பிரதாப் சஹி. கடந்த 5 ஆம் தேதி இவருக்கு இருமல் மற்றும் உடல் களைப்பு இருந்ததால்  சிகிச்சைக்குச் சென்றார்.  அங்கு இவருக்கு நடைபெற்ற சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையொட்டி அமரேஷ்வர் பிரதாப் சஹி சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  தற்போது அவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இதையொட்டி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷவர் பிரதாப் சஹி இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.