டில்லி

ன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.200 குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.   இக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.  இந்த கூட்டம் முடிந்த பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அவர்,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதையொட்டி அனைத்து வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 200 குறைக்கப்படுகிறது.

உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு சிலிண்டர் விலையில் 400 ரூபாய் குறைக்கப்படுகிறது. பிரதமர் மோடி ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசை அறிவித்துள்ளார்”

எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதைப் பாராட்டி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதாவது அமைச்சரவை கூட்டத்தில் சந்திரயான் 3 திட்டம் வெறும் வெற்றி அல்ல; தேசத்தின் முன்னேற்றத்திற்கான அடையாளம் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.