டெல்லி:
த்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் குறித்து, கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்க, ஜெய்ராம் ரமேஷ் தலைமையில், 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அக்கட்சி எம்.பி., ராகுல் டுவிட்டரில் தனது எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்க 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் இக்குழு செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ப.சுதம்பரம், திக்விஜய் சிங், அமர்சிங், கவுரவ் கோகோய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.