ஐதராபாத்

காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

வருகிற 30 ஆம் தேதி 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் கட்சியான பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

இன்று தெலுங்கானா மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

* மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதி உதவி

* ரூ.500க்கு சமையல் எரிவாயு

* அரசு பஸ்களில் மாநிலம் முழுவதும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்

* ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி

* குத்தகை விவசாயிகளுக்கும் இது போல் வழங்கப்படும்.

* விவசாய கூலிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் நிதி வழங்கப்படும்

* நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.500 போனஸ் வழங்கப்படும்.

* கிரக ஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்

* வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட இலவசமாக நிலத்துடன், வீடு கட்ட ரூ.5 லட்சம் நிதி உதவி

* தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு 750 சதுர அடி நிலம் வழங்கப்படும் 

* விவசாயிகளுக்கு 24 மணி நேரம் இலவச மின்சாரம்

*விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடி

*வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம்

* மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், பீடி சுற்றும் தொழில் செய்பவர்கள், தனியாக வாழும் பெண்கள், நெசவாளர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். 

* ரூ.10 லட்சம் மதிப்புள்ள சுகாதார காப்பீடு வழங்கப்படும் 

என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது.