டெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் மற்றும் குமரி மாவட்ட தலைவர்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி நியமித்துள்ளார்.
இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியாகாந்தி  ஒப்புதலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் மற்றும் குமரி மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி,
1. கன்னியாகுமரி கிழக்கு – கே. டி. உதயம்
2. கன்னியாகுமரி மேற்கு – டாக்டர் பினுலால் சிங்
3. நாகர்கோவில் மாநகர் மாவட்டம் – நவீன் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்  மாநில பொதுச்செயலாளராக  திருமதி தாரகை கத்பர்ட் நியமிக்கப்பட்டுள்ளர்.
இந்த நியமனங்கள் உடனே அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.