திருச்சி

திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.   நேற்று ஒரே நாளில் 10,908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி தொகுதியின் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.  இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர் தன்னை மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2 நாட்களாக தம்மை நேரில் சந்தித்தோர், மேலும் தம்முடன் தொடர்பில் இருந்தோர் என அனைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.