சென்னை

பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பவினா பென் படேலுக்கு காங்கிரஸ் தலைவர் ராம சுகந்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன.   இதில் பல நாடுகளில் இருந்தும் வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டு போட்டியிட்டு வருகின்றனர்.

இந்தியாவின் டேபிள் டென்னிஸ் வீராங்கனையான பவினா பென் படேல் இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.  இந்தியாவுக்கு இப்போட்டியில் இது முதல் பதக்கமாகும்.  அவருக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனுமான ராம சுகந்தன் தனது டிவிட்டரில் பவினா பென்னுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.  அவர், “வாழ்த்துக்கள், காலையில் இந்த செய்தியை அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்” எனப் பதிந்துள்ளார்.