
மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் மண்டேலா திரைப்படம் விமர்சன ரீதியாக பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முடி திருத்துவோரை மண்டேலா படத்தில் அவமதித்து விட்டதாக, யோகி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் மீது புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
அதில் “முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படம் முழுவதும் இது போன்ற காட்சிகள் உள்ளன. முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக “எங்கள் தொழிலை செய்பவர்கள் கிராமப்புறங்களில் ஆதிக்க சாதிகளால் பல்வேறு வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர்” என திருச்சி மாவட்ட முடி திருத்துவோர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]