சென்னை:

ஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வரும்  காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் ஆடவர் 77கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட தமிழக வீரர் சதீஸ்குமார், முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார்.

தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கத்துக்கு ஜனாதிபதி கோவிந்த் வாழ்த்துதெரிவித்திருந்தார். மேலும், தமிழக அரசியல் கட்சியினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக  முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.