நெல்லை

நெல்லை மாவட்ட ஆட்சியர் வரும் 21 ஆம் தேதி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

பழமையான மற்றும் பிரச்த்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் தமிழகத்தில் நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ளது.

நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆனித் தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆனித் திருவிழா தேரோட்டம் வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது.

என்வே நெல்லை மாவட்டத்திற்கு வருகிற 21-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  வரும் 29-  ஆம் தேதி இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வேலை நாளாக செயல்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.