கோவை: கோவை மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணி ஊழியர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, முதல்வர் நிவாரண நிதிக்கு நிதிஅளிக்க முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினர் நிதிகளை வாரி வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாநகராட்சியில் ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு 28 ஆயிரத்து 100 ரூபாய் பணத்தை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் அளித்தனர்.
துப்புரவு பணியாளர்களின் தாராள குணம் வெகுவாக பாராட்டப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel