சென்னை: இன்று வள்ளுவர் தினத்தையொட்டி, வள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினர். பின்னர் தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார். அதன்படி, அண்ணா விருதினை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கினார் மு.க.ஸ்டாலின்.

திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் சென்னை மேயர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

2026ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதை முனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
2025ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதினை அமைச்சர் துரைமுருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதினை வெ.இறையன்புவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பசிசாக கொடுக்கப்பட்ட ரூ.5 லட்சம் பணத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார் இறையன்பு.

தந்தை பெரியார் விருதை வழக்கறிஞர் அருள்மொழிக்கு வழங்கினார்.
அம்பேத்கர் விருதை சிந்தனைச்செல்வனுக்கு வழங்கினார்.
காமராஜர் விருதை எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கு வழங்கினார்.
பாரதியார் விருதை கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு வழங்கினார்.
பாவேந்தர் பாரதிதாசன் விருதை கவிஞர் யுகபாரதிக்கு வழங்கினார்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதை சு.செல்லப்பாவுக்கு வழங்கினார்.
இலக்கிய மாமணி விருது (மரபுத்தமிழ்) த.இராமலிங்கத்திற்கு வழங்கினார்.
இலக்கிய மாமணி விருது (ஆய்வுத்தமிழ்) சி.மகேந்திரனுக்கு வழங்கினார்.
இலக்கிய மாமணி விருது (படைப்புத்தமிழ்) இரா.நரேந்திரகுமாருக்கு வழங்கினார்.
விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
[youtube-feed feed=1]