சென்னை

சென்னை கிண்டியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ப்னரமைக்கப்பட்டு இன்று முதல்வர் மு க ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சென்னையில் அமைந்துள்ள கிண்டி சிறுவர் பூங்காவுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். கிண்டிசிருவர் பூங்காவை ஆண்டுக்கு சுமார் 8 முதல் 9 லட்சம் பேர் பூங்காவை பார்வையிடுவார்கள்.

தற்போது இந்த சிறுவர் பூங்கா ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு உள்ளது. இன்று இந்த பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர்ர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவ்க்காக பூங்காவிவுக்கு வந்த முதல்வர்ர், முதலாவதாக வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 9 நவீன வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்து பிறகு யானைகள் கணக்கெடுப்பு குறித்த புத்தகத்தை வெளியிட்டு, பூங்காவை திறந்து வைத்தார்.

இந்த பூங்கா வன உயிரினங்களின் அமைவிடங்கள் மற்றும் காடுகள் இயற்கையாக இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறுவர்களுக்கான நூலகம், விழா அரங்கம், பார்வையாளர்களுக்கான வசதிகள், பறவைகள், விலங்குகளின் வாழ்வியல் முறைகளை அறியும் வகை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.