போபால்: வீர மரணம் ராணுவ வீரரின் குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவியை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் பாரமுல்லாவில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசாருடன், பாதுகாப்புப்படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராணுவ வீரர் சேபோய் மணிஷ்  படுகாயம் அடைந்தார்.

அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில், இன்று அவரது உடல் சொந்த மாநிலமான மத்திய பிரதேசம் கொண்டு வரப்பட்டது.

சேபோய் மணிஷ் உடலுக்கு மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: மணிஷ் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். மேலும், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்று சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.