சென்னை: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தமிழகம் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக, சிஐஐ தென் இந்திய மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் சிஐஐ தென் இந்திய மாநாடு இன்று தொடங்கி உள்ளது. சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சி ஐஐ தென் இந்திய மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரை ஆறிறினார். அப்போது அவர் பேசியதாவது,
இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகித்து வருகிறது என்றவர், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தமிழகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. முதலமைச்சர் தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமானது. தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என கூறினார்.
மேலும், கோவை, திருச்சி, ஒசூர் போன்ற மாவட்டங்கள் பெருமளவில் வளர்ச்சி பெற்றுள்ளன. கடந்த 11 மாதங்களில் 12.6 பில்லியன் டாலர் அளவிற்கு மின்சாதனங்களை ஏற்றுமதி செய்துள்ளது தமிழ்நாடு. சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்ற 3ஆவது திட்டம் தயாராகி வருகிறது. பசுமைப் பொருளாதார துறையில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொழில்துறைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு – சிஐஐ இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவேன் என கூறினார்.