சென்னை
பிரபல இதய மருத்துவர் கே எம் செரியன் மறைவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல மருத்துவர் கே எம் செரியன் மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை மற்றொரு நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவைச் சிகிக்சையை செய்து காட்டிய கேரளாவை சேர்ந்த மருத்துவர் ஆவார்.
வயது முதிர்வின் காரணமாக இவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார்.
தமிழக் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,
”பிரான்டியர் லைப்லைன் மருத்துவமனையின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியும், இதய அறுவை சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்றவருமான டாக்டர் கே.எம்.செரியனின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இதய அறுவை சிகிச்சையில் அவரது முன்னோடிப் பணி எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியது மற்றும் மருத்துவத் துறையில் பலருக்கு உத்வேகம் அளித்தது
அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். மருத்துவத்துறையில் அவரது பங்களிப்புகள் மருத்துவத்தில் சிறந்து விளங்க தொடர்ந்து ஊக்கமளிக்கும்.”
எனப் பதிவிட்டுள்ளார்.