வாஷிங்டன்: அமெரிக்க வான் எல்லையில் பறந்துகொண்டிருந்த சீன நாட்டைச்சேர்நத்  சேர்ந்த ராட்சத உளவு பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது.  இதற்காக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் ராணுவத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால், சீன அதிபரோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது.

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்துக்கு மேல் முழு ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில், சந்தேகத்துக்கு உரிய வகையில் ஒரு ராட்சத பலூன் பறந்து வந்தது. இது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது. உடனடியாக அந்த பலூனை சுட்டு வீழ்த்த அதிபர் ஜோ பைடன் ராணுவத்துக்கு ஒப்புதல் அளித்தார்.

ஆனால், அந்த பலூன் அணுசக்தி ஏவுதளத்திற்கு மேல் பறந்துகொண்டிருந்தது என்பதால், அப்போது அதைச் சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று ராணுவம் கருதியது. எனவே பலூனை வீழ்த்தும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், அந்த பலூன் நகர்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. அந்த பலூனானது, கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் தெற்குகிழக்கே உள்ள தெற்கு கரோலினா அட்லாண்டிக் பெருங்கடல் கரை அருகே பற்நதபோருது, அமெரிக்க ராணுவம் அநத் பலூனை  சுட்டு வீழ்த்தியது

முன்னதாக, அந்த பலூன் வானிலை கண்காணிப்புக்காக அனுப்பப்பட்டது என்றும் வழி தவறி அமெரிக்க வான் எல்லைக்குச் சென்றுவிட்டது என்றும் சீனா வருத்தம் தெரிவித்தது. ஆனால், அமெரிக்கா, அதை ஏற்காமல், அது உளவு பனூன் என கூறி  சனிக்கிழமை பலூனை சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் செயல் அத்துமீறல் என்றும் தக்க பதிலடி கொடுப்போம் என்று சீனா கூறியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பான சீன வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளில்லா பலூனை   தாக்குவதற்கு அமெரிக்கா சிவிலியன் விமான பலத்தை பயன்படுத்தியதற்கு சீனா கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளது.