வாஷிங்டன்: இந்தியாவின் வடக்கு எல்லையில் 60 ஆயிரம் வீரர்களை சீன நிறுத்தி இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதல் எதிரொலியாக இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வருகின்றன. ஆகையால் தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கிறது.
அதே நேரத்தில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக மாஸ்கோவில் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 5 அம்ச திட்டம் வகுக்கப்பட்டது.
இந் நிலையில்,  இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதிகளில் சீனாவானது, 60 ஆயிரம் வீரர்களை நிறுத்தி உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். சீனாவின் இந்த நடவடிக்கை, மிக மோசமான ஒன்று என்றும் பாம்பியோ கூறி உள்ளார்.