மாஸ்கோ

சீனா மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது..

ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் படையெடுத்து ஒன்றரை ஆண்டுகளாகப் போர் நீடித்து வருகிறது. உலக நாடுகளில், எரிபொருள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை இது ஏற்படுத்தி உள்ளது.

தற்போது ரஷ்யாவுக்கு, சீன வெளியுறவு  அமச்சரி வாங் யி 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ரஷ்யாவைச் சென்றடைந்த அவர் அந்நாட்டு வெளியுறவு மந்திரி செர்கேவை நேரில் சந்தித்துப் பேசினார்.

ரஷ்யாவின் வெளி விவகார அமைச்சகம் எக்ஸ் சமூக ஊடகத்தில், வெளியுறவு அமைச்சர்கள் செர்கே லாவ்ரவ் மற்றும் மந்திரி வாங் யி ஆகியோர் சந்தித்துப் பேசிக் கொண்டனர் எனத் தெரிவித்து உள்ளது.  ஒன்றரை ஆண்டுகளாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் நீடித்து வரும் சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளையும் செய்து வருகின்றன.  ரஷ்யவுக்குபொருளாதார தடைகளையும் விதித்து நெருக்கடி அளிக்க முயன்றன., இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்படாமல் தொடர்ந்து வருகிறது.

ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா மற்றும் சீனா நாடுகள் உள்ளன. அண்மையில் ரஷ்யாவுக்குச் சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், அதிபர் புதினை சந்தித்துப் பேசினார். ரஷியா போரில் வெற்றி பெறும் என்ற வகையில் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது.

சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, வடகொரியா மற்றும் ரஷியா இடையேயான ஆயுத விற்பனைக்கு எதிராக நாங்கள் முன்பே தடைகளை விதித்து இருக்கிறோம். தேவைப்பட்டால், கூடுதல் தடைகளை விதிக்கவும் நாங்கள் தயங்கமாட்டோம் என கூறினார்.

இத்தகைய சூழலில், சீன வெளியுறவு அமைச்சரின் பயணம் அமைந்துள்ளது.  எனவே ரஷ்யா மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் உக்ரைன் போர் பற்றி ஆலோசிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.