ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-வில் நடைபெற்ற சிவராத்திரி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மின்சார விபத்தில் 14 சிறுவர்கள் சிக்கியதாகவும் அதில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஊர்வலத்தின் போது கையில் கொண்டு செல்லப்பட்ட கொடி ஒன்று மேலே சென்ற உயர்மின் அழுத்த ஒயரில் பட்டு ஷாக் அடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய சிறுவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அதில் மூன்று சிறுவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.