டில்லி

ள்ளிக் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது டில்லியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டில்லி குர்கான் பகுதியில் உள்ளது ரியான் சர்வதேச பள்ளி.  நேற்று முன் தினம் இந்த பள்ளியில் கழிவறையில் ஒரு சிறுவனின் பிணம் கழுத்து அறுபட்டு கிடந்தது.  இரண்டாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன் பிணத்தை கைப்பற்றி போலீஸ் விசாரணை நடத்தியது.   விசாரணையில் அதே பள்ள்ப் பேருந்தில் நடத்துனராக பணி புரியும் அசோக் குமார் என்பவர் சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.

சம்பவத்தன்று, அந்தச் சிறுவனை கழிவறையில் வைத்து அசோக் குமார் பலாத்காரம் செய்துள்ளார்.  பிறகு சிறுவன் அதை வெளியே சொல்லிவிடுவானோ என்னும் பயத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு பிணத்தை கழிவறையிலேயே விட்டு ஒன்றும் தெரியாதது போல் பணியில் ஈடு பட்டுள்ளார்.  அவரை கைது செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த பரபரப்பு ஓயும் முன்னரே மற்றொரு சம்பவம் வேறொரு பள்ளியில் நடைபெற்றுள்ளது.  தனியார் பள்ளியொன்றில் பியூன் வேலை பார்ப்பவர் விகாஸ் (வயது40)  முதலில் காவலராக பணி புரிந்து வந்த விகாஸ் தற்போது பியூனாக வேலை பார்த்து வருகிறார்.  நேற்று அந்தப் பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமி மதிய உணவு சாப்பிட்டுவிட்டு உணவுப் பையை கொடுத்துவிட்டு வகுப்பறக்கு சென்றுள்ளார்.  அந்த ஐந்து வயது சிறுமியை பின் தொடர்ந்த குழந்தையை விகாஸ் பலாத்காரம் செய்து விட்டு அதை வெளியே சொல்லக் கூடாது என மிரட்டி உள்ளார்.

வீட்டுக்கு திரும்பிய அந்தக் குழந்தைக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   விகாஸ் பற்றி அந்தக் குழந்தை பெற்றோரிடம் கூறியது.   உடனடியாக குழந்தையை மருத்துவ மனையில் அனுமதி செய்த பெற்றோர், போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.   போலீசார் விகாஸை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  குழந்தை மிகவும் மன உளைச்சலில் இருப்பதால் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.