சென்னை: தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள அரசின் திட்டங்கள் குறித்து தலைமைச்செயலாளர் சிவ்தாஸ்மீனா மாவட்ட ஆட்சியர்களுடன் 4 நாட்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதன்படி,  ஜூன் 11 முதல் ஆட்சியா்களுடன் தலைமைச் செயலா் 4 நாள்கள் ஆலோசனை மேற்கொள்கிறார்.

நாடு முழுவதும் 18வது மக்களவைக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளை (ஜுன் 1ந்தேதி) இறுதிக்கட்ட தேர்தல் முடிவடைந்து, ஜுன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஓரிரு நாளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்படும். அதன்பிறகு,   அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைச் செயலா்  சிவதாஸ்மீனா ஆலோசனை மேற்கொள்ளதாக தகவல் வளியாகி உள்ளது.

ஜூன் 11-இல் தொடங்கி வெவ்வேறு தேதிகளில் 4 நாள்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தில் முக்கியத் துறைகளின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதற்கான கடிதத்தை அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் பொதுத் துறை துணைச் செயலா் ஜெ.இ.பத்மஜா அனுப்பியுள்ளாா்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்,  தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு, நடத்தை விதிகள் அனைத்து நீக்கப்படும். அதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா்களுடன் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்தை தலைமைச் செயலா் நடத்தவுள்ளாா். தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்தில் ஜூன் 11, 13, 15, 19 ஆகிய தேதிகளில் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த ஆய்வு கூட்டம் 4 மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

ஜூன் 11-ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியா்களும்,

ஜூன் 13-ஆம் தேதி திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, கடலூா் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியா்களும் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளனா்.

ஜூன் 15-ஆம் தேதி சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி, கரூா் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியா்களுடனும்,

ஜூன் 19-ஆம் தேதி மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராநாதபுரம், விருதுநகா், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியா்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கவுள்ளன.

இந்த கூட்டங்கள் அனைத்தும் காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெறும்.

19 துறைகளின் முக்கிய திட்டங்கள்:

ஆட்சியா்களுடனான ஆலோசனைக் கூட்டங்களில், 19 துறைகளைச் சோ்ந்த முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. குறைதீா் துறையின் சாா்பில் முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வா், நீங்கள் நலமா?, குறைதீா் நாள் மனுக்களின் நிலை குறித்தும், வருவாய் மற்றும் பேரிடா் துறை சாா்பில், பல்வேறு சான்றிதழ்கள் வழங்குவது, பட்டா மாறுதல், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடா்பாகவும் விவாதிக்கப்பட உள்ளன.

போதைப் பொருள்களுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாகவும், கலைஞரின் கனவு இல்லம், சாலை சீரமைப்பு, குடிநீா் விநியோகம், நமக்கு நாமே, மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றுவதை தடுக்கும் திட்டம், தமிழ் புதல்வன், புதுமைப் பெண், முதல்வரின் காலை உணவு, கடனுதவித் திட்டங்கள், கல்லூரி கனவு, உயா்வுக்குப் படி, இலங்கைத் தமிழா்களுக்கான வீடு கட்டும் திட்டம் என 19 துறைகளைச் சோ்ந்த முக்கிய திட்டங்களின் இப்போதைய நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.