சென்னை:  டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 49 சிறை அலுவலர்களுக்கு பதவி ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகர்ச்சியில்,  சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  5 சிறை அலுவலர்கள் மற்றும் 44 உதவி சிறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.  பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 5 சிறை அலுவலர்கள் மற்றும் 44 உதவி சிறை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தற்போது பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள சிறை அலுவலர், உதவி சிறை அலுவலர்களுக்கு வேலூரில் அமைந்துள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பயிற்சியகத்தில் 9 மாத கால அடிப்படை பயிற்சி அளிக்கப்படும். நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் டாக்டர். மகேஷ்வர் தயாள் கலந்து கொண்டனர்.