சென்னை:  தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தேர்வாகி உள்ள 10 ஆயிரம் பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பணி ஆணை வழங்க உள்ளார். இதற்கான நிகழ்ச்சி பிப்ரவரி முதல்வாரத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு பணிகளுக்கு  டிஎன்​பிஎஸ்​சி, டிஆர்​பி, எம்​ஆர்பி  போன்ற அரசு தேர்வாணையங்கள். அதாவது, தமிழ்​நாடு அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் (டிஎன்​பிஎஸ்​சி) மூல​மாக​வும், அரசு பள்ளி ஆசிரியர்​கள் ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் வாயி​லாக​வும், அரசு மருத்​து​வர்​கள், நர்​சுகள் மற்​றும் மருத்​து​வப் பணி​யாளர்​கள், மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் (எம்​ஆர்​பி) மூல​மாக​வும்  மூலம் தேர்வுகள்  நடத்தப்பட்டு  பயனர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி,  தேர்வு செய்​யப்​பட்​டுள்ள 10 ஆயிரம் பேருக்கு பிப்​ர​வரி முதல் வாரத்​தில் பணி நியமன ஆணைகளை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வழங்க உள்​ளார்.‘

குரூப்-4 மூலம் 5,307 பேர் இந்​நிலை​யில், அனைத்து துறை​களின் செயலர்​களுக்கு மனிதவள மேம்​பாட்​டுத் துறை செயலர் சி.சமயமூர்த்தி அனுப்​பி​யுள்ள ஓர் உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: டிஎன்​பிஎஸ்சி குருப்-4 தேர்வு மூல​மாக பல்​வேறு துறை​களுக்கு 5,307 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரியம் வாயி​லாக மருத்​து​வர்​களும், மருத்​து​வப் பணி​யாளர்​களும், ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூலம் ஆசிரியர்​களும் தேர்வு செய்​யப்​பட்டு வரு​கின்​றனர். புதிய பணியாளர்களுக்கு பிப்​ர​வரி முதல் வாரத்​தில் தமிழக முதல்​வர் மூலம் பணி நியமன ஆணைகளை வழங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

எனவே, டிஎன்​பிஎஸ்​சி, டிஆர்​பி, எம்​ஆர்பி ஆகிய தேர்வு வாரி​யங்​கள் மூலம் தேர்வு செய் ​யப்​பட்​ட​வர்​களுக்கு பணி நியமன ஆணைகளை தயா​ராக வைத்​திருக்​கு​மாறு சம்​பந்​தப்​பட்ட துறைத் தலை​வர்​கள் மற்​றும் பணி நியமன அலு​வலர்​களுக்கு செயலர்​கள் உரிய அறி​வுரை வழங்க வேண்​டும்.

இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

டிஎன்​பிஎஸ்சி மூலம் 5,307 பேர், டிஆர்பி மூலம் 1,700 முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர்​கள் மற்​றும் உடற்​கல்வி இயக்​குநர்​கள், எம்​ஆர்பி வாயி​லாக ஏறத்​தாழ 3 ஆயிரம் மருத்​து​வப் பணி​யாளர்​கள் என 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் அரசு பணி​களுக்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இவர்​கள் அனை​வருக்​கும் சென்​னை​யில் பிப்​ர​வரி முதல் வாரத்​தில் நடை​பெறும் பிரம்​மாண்ட விழா​வில் பணி நியமன ஆணைகளை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வழங்க உள்​ளார். இதற்​கான பணி​கள் தீவிர​மாக நடை​பெற்​று வரு​கின்​றன.

[youtube-feed feed=1]