சென்னை: கொருக்குப்பேட்டை – மணலி சாலை ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து அந்த பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுளளது.

கொருக்குப்பேட்டை – மணலி சாலையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 12ஆம் தேதி பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டையில் இரயில்வே 2பி சந்திக்கடவில் ரூ.96.04 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தினை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
[youtube-feed feed=1]