சென்னை : ரூ.18.90 கோடி மதிப்பிலான 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.18.90 கோடி மதிப்பிலான 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். மேலும் 36 தொழில் நுட்ப உதவியாளர்கள், 24 அளவர், உதவி வரைவாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
Patrikai.com official YouTube Channel