‘சேரன் பாண்டியன்’ உள்பட பல்வேறு படங்களில் நடித்து வந்த நடிகை சித்ரா,  நல்லெண்யெய் விளம்பரம் மூலம் புகழனின் உச்சத்திற்கு சென்று, தமிழக மக்களிடையே வெகு பிரபலமான நடிகை சித்ரா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

80-ஸ் காலக்கட்டத்தில் தமிழக ரசிகர்களிடையே பிரபலமாக வலம்வந்த நடிகர்களில் ஒருவர் நடிகை சித்ரா. இவர்  ‘சேரன் பாண்டியன்’ படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்த இவரது கதாபாத்திரம் மிகவும் பிரபலம். தொடர்ந்து  ஏராளமான சினிமா மற்றும் , சீரியல்களில் நடித்துவந்தார். அவர் நடித்த நல்லெண்ணய் விளம்பரம் நாடு முழுவதும் உள்ள பட்டிதொட்டிகளில் பிரபலமானது. இதைனால்,  நல்லெண்ணய் சித்ரா என அழைக்கப்பட்டார்.

சென்னையில் கணவர் மற்றும் மகளுடன் வசித்துவந்த சித்ரா இன்று அதிகாலை மாரடைப்பால் திடீர் மரணமடைந்திருக்கிறார். இப்போது அவரது உடல் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.