சென்னை: PRESS, Secretariat, TNEB, GCC, Defence, Police, Doctor, EB போன்ற பெயர்களை வாகனங்களில் ஒட்டத் தடை  மே1ந்தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே பலமுறை இதுபோன்ற உத்தரவுகள் வெளியானாலும், ஆட்சி மாற்றத்துக்கு தகுந்தவாறு, இதுபோன்ற போலி லேபிள்களை ஒட்டிக்கொண்டு, அலப்பறை செய்பவர்கள் அதிகரித்துக்கொண்டே உள்ள நிலையில், தற்போது மீண்டும், வாகனங்களில்  பெயர்களை ஒட்ட தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

இந்த தடை மே 2 முதல் அமலுக்கு வருகிறது.  தடை, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

காவல்துறை மற்றும் அரசு துறை அதிகாரிகள், பொதுமக்களை ஏமாற்றும் வகையில், பலரு இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களில்,  PRESS, Secretariat, TNEB, GCC, Defence, Police, Doctor, EB, Media  போன்ற பெயர்களை பலர் ஒட்டி வைத்துக்கொண்டு ஏமாற்றி வருகின்றனர்.  இதுமட்டுமின்றி அரசு  பலர் அரசு ஊழியர்கள் என்பதையும் வெளிப்படுத்தும் வகையில், தங்களது வாகனங்களில் அவர்கள் பணியாற்றும் துறையின் பெயர்களையும் ஒட்டி வைக்கின்றனர்.  இதுமட்டுமின்றி, அரசியல் கட்சியினர், பொறம்போக்குகள், ரவுடிகள் என பலரும் தங்களது வாகனங்களில் பிரஸ், மீடியா போன்ற பெயர்களை பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற போலிகளின் நடவடிக்கைகளால் அவ்வப்போது பிரச்சினைகளும் எழுகிறது.

இதைத்தொடர்ந்து, மே 2ந்தேதி முதல்,  தனிநபர் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதித்து  போக்குவரத்து போலீசார் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறையினர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “தனியார் வாகனங்களின் வாகன எண் தகட்டில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள்/குறிகள் வடிவில் தங்களது துறை அடையாளங்களை வெளிப்படுத்துவது. தனிநபர்களுக்கு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் பரவலான எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தலாம்.

பெரும்பாலும், சென்னை பெருநகரில் உள்ள தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், டிஎன்இபி, ஜிசிசி, காவல் துறை உட்பட முப்படை போன்ற துறைகள்/நிறுவனங்களின் பெயர்களைக் காணலாம். இது போன்ற ஸ்டிக்கர்கள் வாகன எண் தகட்டிலும், வேறு பகுதியிலும் காணப்படும். இத்தகைய அரசாங்கத் தொடர்புடைய சின்னங்கள்/எழுத்துக்களை தனியார் வாகனங்களில் வெளிப்படுத்துவது அதன் இயக்கம் மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்கிறது. கூடுதலாக, குற்றம் சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள் இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருகிறார்கள்.

இது தவிர, பல தனியார் வாகனங்களில் ஒரு சில அரசியல் கட்சியை சித்தரிக்கும் சின்னங்கள், மருத்துவர் அல்லது வக்கீல் என வெளிப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உண்மையின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை இந்த நடைமுறைகளுக்கு எதிராக சாலையைப் பயன்படுத்துப வர்களை எச்சரித்தும், இம்முரண்பாட்டினை தங்களது வாகனத்தில் சரிசெய்ய 01.05.2024 வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.

மேலும் இவ்விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது வருகின்ற 02.05.2024 முதல். MV சட்டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் (மோட்டார் வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத குறுயீடு) பிரிவு 198-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் மற்றும் வாகன எண் தகட்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் MV விதி 50 u/s 177-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.