சென்னை

வின் பால் விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சென்னை மக்கள் கலக்கம் அடைந்துள்ளன்ர்.

தமிழக தலைநகர் சென்னையில் வசிக்கும் மக்கள் ஆவின் பாலையே அதிகம் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.  ஆவின் பால் சென்னையில் உள்ள அம்பத்தூர் பால் பண்ணையில் 4.20 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலும், மாதவரம் பால்பண்ணையில் 4.50 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலும் தயாரிக்கப்படுகின்றன.

தற்போது சென்னை மாதவரம் பால் பண்ணையில் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பால் பாக்கெட்டுகள் உற்பத்தி இல்லாத காரணத்தால் பால் கொண்டு செல்லும் வாகனங்கள் மாதவரம் பால் பண்ணை வளாகத்திற்குள்ளேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நகரில் 2 லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வரவேண்டிய தினசரி பால் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாலும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாகவும் ஆவின் பால் பாக்கெட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஆவின் பால் விநியோகம் முற்றிலும் முடங்கியது.

இன்று காலை 7 மணி வரை வெளியூர் செல்ல வேண்டிய வாகனங்கள் புறப்படவில்லை, இதன் பிறகு உற்பத்தி செய்யப்பட்டா பால் காலை 11 மணிக்கு பிறகே விநியோகம் செய்ய முடியும் என்று பால் முகவர்கள் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

கொளத்தூர், மீஞ்சூர், வியாசர்பாடி, மணலி, எண்ணூர், புரசைவாக்கம், பெரம்பூர், சூளைமேடு, பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய 2 லட்சம் லிட்டர் ஆவின் பால் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.