ரோடு

சென்னையில் இருந்து கோவை செல்லும் ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது..

நேற்று இரவு சென்னை கோயம்பேட்டில் இருந்து கோவை செல்லும் தனியார் ஆம்னி பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. கார்த்திகேயன் என்னும் ஓட்டுநர் இந்த பேருந்தை இயக்கிய நிலையில், பயணிகளில் சிலர் ஆங்காங்கே அவர்களுக்கு தேவையான இடங்களில் இறங்கினர்.

இன்று அதிகாலை 15 பயணிகளுடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.  எனவே அதிர்ச்சி அடைந்த ஓட்ட்நர் கார்த்திகேயன் பேருந்தை உடனடியாக சாலையோரமாக நிறுத்திய தோடு, உள்ளே இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வெளியேற்றியுள்ளார்.

ஓடுநரின் இந்த துரித நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சித்தோடு காவல்த்றையினர், தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.